Tuesday 9 July 2013

காய்கரிகள்

Tips....காய்கறிகளின் மருத்துவ குணங்கள்:வாழைப்பூ:இதில் இரும்புச்சத்து,போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள்நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்புத்துணர்வையும்தரவல்லது.வாழைத்தண்டு:இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது.இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரைபிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல்அடைப்பை தடுக்கும்.வாழைக்காய்:இரும்புச்சத்து,பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும்குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வதுநல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.பாகற்காய்:வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,கால்சியம் சத்துக்கள்நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக்கட்டுப்படுத்தும்.சேப்பங்கிழங்கு:கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும்,பற்களையும் உறுதிப்படுத்தும்.பீட்ரூட்:கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.வெண்டைக்காய்:போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.கோவைக்காய்:வைட்டமின்ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன.வயிற்றுப்புண், வாய்ப்புண், மூலநோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.முருங்கைக் காய்:வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.பெண்களுக்குமாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்துஉற்பத்தியைப் பெருக்கும்.சுண்டைக்காய்:புரதம்,கால்சியம், இரும்புச்சத்து,கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்துவந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.சுரைக்காய்:புரதம்,கால்சியம், இரும்புச்சத்து,பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவைஉடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.குடைமிளகாய்:வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறைநீக்கி செரிமான சக்தியை தூண்டும்.சௌசௌ:கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.அவரைக்காய்:புரதம்,நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்துதேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.காரட்:உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.கொத்தவரங்காய்::இரும்புச்சத்து,கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.கத்தரி பிஞ்சு:கால்சியம், இரும்புச்சத்து,பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

No comments:

Post a Comment